வாரணாசி: மக்களவை தேர்தலில் பிரதமர் மோடி உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் 3வது முறையாக போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் அஜய்ராய் நிறுத்தப்பட்டுள்ளார். வாரணாசி தொகுதியில் கடைசி கட்டமாக ஜூன் 1ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த நிலையில் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து உபி முன்னாள் முதல்வர் அகிலேஷ்யாதவ் மனைவி டிம்பிள் யாதவுடன் இணைந்து காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி பிரசாரம் மேற்கொள்ள உள்ளார். இன்று மாலை திறந்த வாகனத்தில் 7 கிமீ தூரத்திற்கு பிரமாண்ட பேரணி நடத்த உள்ளனர்.