பிரதமர், முதல்வருக்கு தீவிரவாதி பன்னூன் மிரட்டல்

சண்டிகர்: இந்தியாவில் தீவிரவாதியாக அறிவிக்கப்பட்ட குர்பத்வந்த்சிங் பன்னூன், பிரதமர் மோடி, ‘‘பஞ்சாப் முதல்வர் பக்வந்த் மான் மற்றும் பஞ்சாப் போலீசாருக்கு முறைமுகமாக மிரட்டல் விடுத்துள்ள வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதில் ஒரு வீடியோவில் பிரதமர் மோடியே, நீங்கள் உங்களது பாதுகாப்பு படை இன்றி டெல்லிக்கு வாருங்கள். ஷஜீத் நிஜ்ஜாரின் படுகொலைக்கு சீக்கியர்களுக்கான நீதி அமைப்பானது காலீஸ்தான் கொடியை ஏற்றி பழிவாங்க போகிறது” என்று குறிப்பிட்டுள்ளார். இதேபோல் மற்றொரு வீடியோவில், ‘‘குடியரசு தின விழாவில் பஞ்சாப் முதல்வர் மான் தேசியக்கொடி ஏற்றுவதை தடுக்க வேண்டும்” என்றும் வலியுறுத்தி இருக்கிறான்.

Related posts

கன்னியாகுமரிக்கு கூடுதல் ரயில் திட்டங்கள்: மக்களவையில் விஜய்வசந்த் வலியுறுத்தல்

சென்னை எழும்பூர் – நாகர்கோவில் இடையே சிறப்பு வந்தே பாரத் ரயில் சேவை நீட்டிப்பு

ஜிகா வைரஸ் பரவல்: மாநில அரசுகளுக்கு ஒன்றிய அரசு எச்சரிக்கை