இதில் 9 பேர் உயிரிழந்தனர். மேலும் 30-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து நிகழ்விடத்துக்கு சென்ற மீட்புப்படையினர் மற்றும் போலீசார், பேருந்து கவிழ்ந்த இடத்தில் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், சுற்றுலா பேருந்து விபத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள X தள பதிவில், தமிழகத்தின் நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே பேருந்து விபத்துக்குள்ளானதில் 9 பேர் உயிரிழந்தது வேதனை அளிக்கிறது. என் எண்ணங்கள் இறந்த குடும்பங்களுடன் உள்ளன. காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். அவர்களது குடும்பத்தினருக்கு, பிரதமரின் நிவாரண நிதியில் இருந்து ரூ. 2 லட்சம் நிதியுதவி வழங்க பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார். விபத்தில் காயமடைந்தவர்களுக்கு தலா 50,000 வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.