பிரதமர் மோடி குறித்து அவதூறு கருத்து தெரிவித்த மாலத்தீவு அமைச்சர்கள் மரியம் ஷியுனா, மால்ஷா ஷரீஃப், மசூம் மஜீத் ஆகியோர் அமைச்சரவையில் இருந்து நீக்கப்படுவதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. பிரதமர் மோடி லட்சத்தீவில் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து அவதூறு கருத்து தெரிவித்திருந்தனர். “உயிர் காக்கும் உடை அணிந்த மோடி இஸ்ரேலின் கைப்பாவை” என மரியம் கூறியிருந்தார்.