சென்னை : வெள்ள நிவாரணமாக ஒரு ரூபாயையாவது ஒதுக்கி தமிழ்நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உதவி செய்தாரா என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், “சென்னைக்கு வந்த பிரதமர் மோடி, அப்பட்டமாக பொய் பேசிவிட்டு சென்றுள்ளார். மாநில அரசுக்கு தராமல் மக்களுக்கு நேரடியாக நிதி வழங்கி வருவதாக அப்பட்டமான பொய்யை சொல்லிவிட்டு சென்றுள்ளார் பிரதமர். எந்த மக்களுக்கு நிதி கொடுத்தார் என கூறியிருந்தால் அவர்களுக்கு கிடைத்ததா என கேட்கலாம்,”இவ்வாறு தெரிவித்தார்.