பிரதமர் மோடி மீண்டும் மன்னிப்பு கேட்க நேரிடும் : ராகுல் காந்தி எச்சரிக்கை

டெல்லி : விவசாயிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுத்தால் பிரதமர் மோடி மீண்டும் மன்னிப்பு கேட்க நேரிடும் என்று ராகுல் காந்தி எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் அவர், “”விவசாயிகளுக்கு எதிரான பாரதிய ஜனதாவின் எந்த சதியையும் இந்தியா அனுமதிக்காது; விவசாயிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுத்தால் மோடி மீண்டும் மன்னிப்பு கேட்க நேரிடும். 700-க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிர்த் தியாகம் செய்த பிறகும் பாஜகவினர் திருப்தி அடையவில்லை”இவ்வாறு தெரிவித்தார். 3 வேளாண் சட்டங்களை மீண்டும் கொண்டு வர அரசு திட்டம் எனத் தகவல் வெளியான நிலையில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related posts

சிவகாசி – சாத்தூர் சாலையில் உள்ள லாரி ஷெட்டில் வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் வெடித்து விபத்து

கூட்டுறவு செயலி!

கடன் வாங்கும் முன் கவனியுங்கள்!