நான் குறிப்பாக டாக்டர் மன்மோகன் சிங் ஜியை நினைவுகூர விரும்புகிறேன்.6 முறை அவர் ஒரு தலைவராகவும் எதிர்க்கட்சித் தலைவராகவும் தனது மதிப்புமிக்க சிந்தனைகளால் இந்த சபைக்கு பங்களிப்பை ஆற்றியுள்ளார். அனைத்து எம்.பிக்களுக்கும் முன்னுதாரணமாக மன்மோகன் சிங் திகழ்கிறார். முக்கியமான மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பில் பங்கேற்க வீல் சேரில் வந்து தனது கடமையை மன்மோகன் சிங் ஆற்றினார். ஓய்வு பெற இருக்கும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு வணக்கம் செலுத்த விரும்புகிறேன். கோவிட் -ன் கடினமான காலகட்டத்தில், நாம் அனைவரும் சூழ்நிலைகளைப் புரிந்துகொண்டு சூழ்நிலைகளுக்கு ஏற்றவாறு நம்மை மாற்றிக் கொண்டோம். நாட்டின் பணிகளை நிறுத்த எந்த கட்சி எம்.பி.யும் அனுமதிக்கவில்லை. கொரோனா காலத்தில் அனைத்து எம்.பி.க்களும் ஒன்றுபட்டு உறுதுணையாக நின்றனர். கடந்த 10 ஆண்டுகளாக, நாடு செழிப்பின் புதிய உச்சத்தைத் தொட்டு வருகிறது,”இவ்வாறு தெரிவித்தார்.