Wednesday, June 26, 2024
Home » பிரதமர் மோடி ஆட்சியின் கடைசி 3 ஆண்டுகளில் நாட்டு மக்களின் கடன் சுமை 14 லட்சம் கோடியாக உயர்வு : ஆய்வறிக்கையில் பகீர் தகவல்

பிரதமர் மோடி ஆட்சியின் கடைசி 3 ஆண்டுகளில் நாட்டு மக்களின் கடன் சுமை 14 லட்சம் கோடியாக உயர்வு : ஆய்வறிக்கையில் பகீர் தகவல்

by Porselvi

டெல்லி : பிரதமர் மோடி ஆட்சியின் கடைசி 3 ஆண்டுகளில் நாட்டு மக்களின் கடன் சுமை 14 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. அதே நேரம் மோடி ஆட்சியில் கடைசி 3 ஆண்டுகளில் நாட்டு மக்களின் குடும்ப சேமிப்பு ரூ. 9 லட்சம் கோடி குறைந்துள்ளதாக தேசியக் கணக்குப் புள்ளி விவரம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அந்தப் புள்ளவிவரத்தின்படி, கடந்த 2020-21ம் ஆண்டில் நிகர குடும்ப சேமிப்புகள் ரூ.23.29 லட்சம் கோடியாக உச்சம் தொட்டது. ஆனால் கடந்த 2022-23 வரையிலான 3 ஆண்டு காலத்தில், இந்தியாவில் குடும்ப சேமிப்புகள் ரூ.14.16 லட்சம் கோடியாக சரிந்துள்ளது. கடந்த 2021-22-ஆம் ஆண்டு ரூ.17.12 லட்சம் கோடியாக சரிந்த அந்த சேமிப்புகள், 5 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு 2022-23-ஆம் ஆண்டில் ரூ.14.16 லட்சம் கோடியாக குறைந்தது. இதற்கு முன்பு 2017-18-ஆண்டில் நிகர குடும்ப சேமிப்புகள் ரூ.13.05 லட்சம் கோடியாக மிகவும் சரிந்தது.

இதனிடையே பணவீக்கத்தை கருத்தில் கொண்டால் 2014-க்கு பிறகு தற்போது தான் குடும்ப சேமிப்பு மிக குறைந்துள்ளதாக நிபுணர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். இந்தியக் குடும்பத்தில் சராசரி சேமிப்பு 5.1% ஆக குறைந்து விட்டதாக 2023, செப்டம்பரில் வெளியான வங்கி அறிக்கை தகவல் அளித்துள்ளது.அதே நேரம், நாட்டின் ஒட்டுமொத்த உற்பத்தி மதிப்பில் 5% சேமிப்பு என்பது 47 ஆண்டில் இல்லாத சரிவாகும். அது மட்டுமல்லாமல், 3 ஆண்டுக்கு முன் ரூ.7 லட்சம் கோடியாக இருந்த நாட்டு மக்களின் மொத்த கடன் 2024-ல்-ரூ.14-லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. மோடி அரசின் தவறான பொருளாதாரம், நிர்வாகம், மக்கள் விரோத கொள்கைகளால் சேமிப்பு சரிந்து கடனில் மூழ்குவதாக நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். இந்தியக் குடும்பங்களின் மொத்த கடன் தொகை நாட்டு ஜிடிபியில் 40% அளவுக்கு அதிகரித்து விட்டதாக ஆய்வறிக்கையில் தெரியவந்துள்ளது. இதனை மேற்கோள்காட்டி தவறான பொருளாதாரக் கொள்ளைகளால் மக்கள் வறுமையில் தள்ளி அவர்களது தாலியைப் பறித்தது மோடி ஆட்சி என்று காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது.

You may also like

Leave a Comment

fifteen + 4 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi