புவனேஷ்வர் : என் அம்மா உயிருடன் இருந்தவரை என் பிறந்தநாளுக்கு அவரிடம் ஆசி பெறுவேன் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மேலும் பேசிய அவர், “ஒடிசாவில் பழங்குடியின பெண் எனக்கு இனிப்பு ஊட்டியபோது என் தாயின் நினைவு எனக்கு வந்தது. அந்த பெண்ணின் ஆசிர்வாதம் போன்ற உணர்வுப்பூர்வமான அனுபவம்தான் என் வாழ்வின் மூலதனம். உலகிலேயே இந்தியாவில்தான் உழைப்பும் திறமையும் விஸ்வகர்மா என்று போற்றப்படுகிறது,”இவ்வாறு தெரிவித்தார்.