அப்போது அவர் பேசுகையில், ‘‘சமூகத்தின் ஏழை, நலிந்த பிரிவினரின் வாழ்வில் செழிப்பை கொண்டு வருவதே பாஜ அரசின் குறிக்கோள்.
கடந்த 10 ஆண்டுகளில் இந்த இலக்கை அடைவதில் அரசு மகத்தான வெற்றியை பெற்றுள்ளது’’ என்றார். நிகழ்ச்சியில் பங்கேற்ற சட்டீஸ்கர் முதல்வர் விஷ்ணு தேவ் சாய் பேசுகையில், ‘‘சட்டீஸ்கர் மக்களுக்கு இன்று இரட்டிப்பு மகிழ்ச்சி கிடைத்துள்ளது. நவீன இந்தியாவின் விஸ்வகர்மாவான பிரதமர் மோடியின் பிறந்தநாள் இன்று என்பது குறிப்பிடத்தக்கது. 140 கோடி இந்தியர்களுக்கும் அவர் தொடர்ந்து சேவை செய்ய எனது நல்வாழ்த்துக்கள். அவர் நலமடைய இருக்க பிரார்த்திக்கிறேன்’’ என்றார்.