பிரதமர் வீட்டு வசதி திட்ட நிதி முறைகேட்டில் 13 அரசு அதிகாரிகளுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை: தமிழக அரசு தகவல்

கிருஷ்ணகிரி: பிரதமர் வீட்டு வசதி திட்ட நிதி முறைகேட்டில் கிருஷ்ணகிரியை சேர்ந்த 13 அரசு அதிகாரிகளுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என ஐகோர்ட்டில் தமிழ்நாடு அரசு தகவல் தெரிவித்துள்ளது. பிரதமர் வீட்டு வசதி திட்டத்தில் கிருஷ்ணகிரிக்கு ஒதுக்கிய நிதியை கையாடல் செய்தோருக்கு எதிராக நடவடிக்கை கோரி மனு அளிக்கப்பட்டது. நிதியை கையாடல் செய்த அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி கங்காதரன் என்பவர் 2021-ல் பொதுநல வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி டி.கிருஷ்ணகுமார் மற்றும் பி.பி.பாலாஜி அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறையின் அப்போதைய இணை இயக்குநர் ஈஸ்வரன் விசாரணை நடத்தி அறிக்கையை ஒப்படைத்தார். 13 அரசு அதிகாரிகளுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தகவல் தெரிவித்துள்ளது. கையாடல் செய்த பணத்தை வசூலிக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. 13 அதிகாரிகளுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளதாகக் கூறி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்ட நிலையில் இருதரப்பு வாதங்களையும் பதிவு செய்த நீதிபதிகள் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதால், உத்தரவு பிறப்பிக்க அவசியமில்லை எனக் கூறி வழக்கை முடித்து வைத்தனர்.

 

 

Related posts

முடிவுக்கு வருகிறது போராட்டம் நாளை பணிக்கு திரும்பும் கொல்கத்தா டாக்டர்கள்

இந்தியாவிலிருந்து வெடிமருந்துகள் உக்ரைன் செல்கிறதா? ஒன்றிய அரசு மறுப்பு 

நந்தனம் ஓட்டலில் உள்ள ஸ்பாவில் பாலியல் தொழில் நடத்திய பெண் கைது: 4 பட்டதாரி இளம்பெண்கள் மீட்பு