டெல்லி : பிரதமர் மோடி, இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளன. யு.பி.ஐ. பணப் பரிவர்த்தனை தொடர்பாக இரு நாடுகளுக்கு இடையே
ஒப்பந்தம் கையெழுத்தானது. இரண்டுநாள் பயணமாக இந்தியா வந்துள்ள இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. நேற்று வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்த நிலையில் ரணில் இன்று பிரதமர் மோடியை சந்தித்தார்.