வங்கதேசம்: மாணவர்கள் போராட்டத்துக்கு பணிந்து வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா ராஜினாமா செய்த நிலையில் அந்நாட்டு நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதாக ராணுவம் அறிவித்துள்ளது. இன்று பிற்பகல் 3 மணிக்குள் நாடாளுமன்றத்தை கலைக்க வேண்டும் என மாணவர் அமைப்பு கெடு விதித்திருந்தது. மாணவர்கள் அமைப்பு கெடு விதித்த நிலையில் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. ராணுவத் தளபதி அறிவித்த இடைக்கால அரசை விரைந்து அமைப்பதற்காக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.