டெல்லி: நரேந்திர மோடி பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார். குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை சந்தித்து மோடி ராஜினாமா கடிதத்தை அளித்தார். மோடி அமைச்சரவையின் ராஜினாமா கடிதத்தை ஜனாதிபதியிடம் அளித்துவிட்டு, ஆட்சி அமைக்க உரிமை கோர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரதமர் மோடியுடன் ராஜ்நாத் சிங், அமித் ஷா உள்ளிட்டோரும் குடியரசுத் தலைவர் மாளிகைக்கு சென்றுள்ளனர்.