சென்னை: பிரதமர் மோடியின் தியானம் மேற்கொள்கிற நடவடிக்கைக்கு தேர்தல் ஆணையம் தடைவிதிக்க வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வலியுறுத்தியுள்ளார். இறுதிக்கட்ட தேர்தல் நடக்கும் தொகுதிகளில் அரசியல் ஆதாயம் தேடவே விவேகானந்தர் பாறையில் தியானம் செய்ய மோடி திட்டமிட்டுள்ளதாகவும், பதவிக்காக நரேந்திர மோடி எவ்வளவு தரம் தாழ்ந்த நிலைக்கு செல்வார் என்பதற்கு தியான நாடகம் ஒரு உதாரணம் என்றும் அவர் தெரிவித்தார்.