டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியுடன் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் சந்திப்பு..!!

டெல்லி: டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியுடன் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் இன்று நேரில் சந்தித்து பேசியுள்ளார். இதுதொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்ட எக்ஸ் பதிவில்; கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் பிரதமர் மோடியைச் சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பின்போது பிரதமருக்கு முதலமைச்சர் பினராயி விஜயன் ஸ்ரீபத்மநாப சுவாமி சிலையை வழங்கியதாக தகவல் வெளியாகி உள்ளது.

டெல்லி சென்றுள்ள கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், பிரதமர் மோடியை சந்தித்து வயநாட்டில் மறு சீரமைப்பு பணிகளை மேற்கொள்ளவும், பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தவும் ரூ.2,000 கோடி நிதி ஒதுக்குமாறும், முதற்கட்டமாக ரூ.900 கோடியை விடுவிக்குமாறும் கோரிக்கை வைத்ததாக தகவல் வெளியாகி உள்ளது. மோடி பிரதமராக 3வது முறையாக பதவியேற்ற பிறகு டெல்லியில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் சந்தித்தது முதல் முறையாகும்.

Related posts

தீப்பிடித்து எரிந்த தயாரிப்பாளர் கார் கட்டுக்கட்டாக ரூபாய் நோட்டு நாசம்: திருப்பத்தூர் அருகே பரபரப்பு

அதிகாரி மிரட்டியதால் அஞ்சலக பெண் ஊழியர் தற்கொலை

பைக் மீது மோதிய கார் கவிழ்ந்து 3 பேர் பலி