சென்னை: பிரதமர் வீட்டு வசதி திட்ட மானியம் வழங்கியதில் ரூ.54.40 லட்சம் அளவுக்கு முறைகேடு நடைபெற்றது. வீட்டு வசதி திட்டங்களுக்கான மானியம் வழங்கியதில் ரூ.54.40 லட்சம் அளவுக்கு முறைகேடு நடந்துள்ளதாக வழக்கு தொடரப்பட்டது. சோழவரத்தைச் சேர்ந்த தாமோதரன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்நிலையில் விசாரணை நிலை குறித்த விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய லஞ்ச ஒழிப்புத் துறைக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.