ஆபத்தான நிலையில் உள்ள தொடக்க பள்ளியை 12 வாரத்தில் இடித்து அகற்ற ஐகோர்ட் கிளை ஆணை..!!

மதுரை: ஆபத்தான நிலையில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியை 12 வாரத்திற்குள் இடித்து அகற்ற உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. தொண்டி வழக்கறிஞர் கலந்தர் ஆஷிக் என்பவர் ஐகோர்ட் கிளையில் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்கு விசாரணையில், மீண்டும் அதே இடத்தில் புதிய பள்ளிக்கூடம் கட்டுவதற்கான நடவடிக்கையும் துவங்க வேண்டும். தவறும் பட்சத்தில் நாளொன்றுக்கு ரூ.1000 அரசுக்கு அபராதம் விதிக்கப்படும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.

 

Related posts

சந்திரபாபு நாயுடுவை பாஜக ஏன் கண்டிக்கவில்லை: ஜெகன் மோகன் ரெட்டி குற்றச்சாட்டு

உலகின் முதல் நாடாக 6ஜி சேவையை இந்தியா அறிமுகம் செய்யும் :ஜோதிராதித்யா

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தொடர் மின்வெட்டு: ஓபிஎஸ் வலியுறுத்தல்