நிர்மலா சீதாராமன் கேள்விக்கு பதில் அளித்த இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் அரசின் சார்பிலும் அர்ச்சகர்களுக்கு ரூ.3,000 வழங்கப்படுவதாக பதில் அளித்தார். இதை தொடர்ந்து பக்தர்களின் கோரிக்கையை ஏற்று பெருமாள் ஊர்வலம் செல்லும் சாலையை சீரமைத்து தரும்படி அறநிலையத்துறை அதிகாரிக்கு நிர்மலா சீதாராமன் அறிவுறுத்தினார். அதற்கு எவ்வளவு செலவாகும் என பாஜக எம்.எல்.ஏ. நைனார் நாகேந்திரன் கேட்டபோது குறுக்கிட்ட நிர்மலா அர்ச்சர்களுக்கு ரேசனில் வழங்குவது போல் அளந்து ஊதியம் வழங்குவதால் தெருவை சீரமைக்க தமிழ்நாடு அரசிடம் நிதி இருக்கும் என்றார்.
பாதையை சீரமைக்க ரூ.30,000 வரை பணம் கொடுப்பதாக பக்தர் ஒருவர் கூறிய போது பணத்தை உண்டியலில் போட வேண்டாம் என்றும், எங்கு கொடுக்க வேண்டுமோ அங்கே கொடுங்கள் என்றும் நிர்மலா சீதாராமன் அறிவுறுத்தினார். வரலாறு காணாத மழை வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்பை ஆய்வு செய்யும் போதும் தமிழ்நாடு அரசை நிர்மலா சீதாராமன் விமர்சித்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. குறையும் சொல்லிவிட்டு கேலி, கிண்டல் செய்வதாக நினைக்க வேண்டாம் என்று நிர்மலா கூறியதும் சமூக வலைத்தளங்களில் விமர்சனத்துக்கு ஆளாகியுள்ளது.