இதேபோல் முருங்கைக்காய் ரூ.130, இஞ்சி ரூ.90, கோவைக்காய், வண்ண குடமிளகாய் ரூ.80, கொத்தவரங்காய், பட்டாணி ரூ.60, வெண்டைக்காய், கத்திரிக்காய், காராமணி, குடைமிளகாய், பீன்ஸ், எலுமிச்சைபழம் ரூ.50, பீர்க்கங்காய் ரூ.45, பீட்ரூட், சேனைகிழங்கு, பச்சை மிளகாய், அவரைக்காய், பாகற்காய் ரூ.40, கேரட், சுரக்காய், முள்ளங்கி ரூ.35, உருளைக் கிழங்கு, நூக்கள், புடலங்காய் ரூ.30, வெள்ளரிக்காய் ரூ.20, முட்டைக்கோஸ் ரூ.13, சவ்சவ் ரூ.12க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இதேபோல், கோயம்பேடு பூ மார்க்கெட்டுக்கு ஆந்திர மாநிலம் கடப்பா, திண்டுக்கல் ஒசூர், மதுரை மற்றும் திருவள்ளூர் மாவட்டம் ஆகிய பகுதிகளில் இருந்து அனைத்து பூக்களும் வருகின்றன. இந்நிலையில் நேற்று முகூர்த்த நாள் என்பதால் கோயம்பேடு பூ மார்க்கெட்டில் ஒரு கிலோ கனகாம்பரம் ரூ.2,000க்கும், மல்லி ரூ.1,800க்கும், முல்லை மற்றும் ஜாதிமல்லி ரூ.1,000க்கும், சம்பங்கி மற்றும் அரளிப் பூ ரூ.250க்கும், சாக்லேட் ரோஸ் ரூ.120க்கும், சாமந்தி மற்றும் பன்னீர் ரோஸ் ரூ.100க்கும் விற்பனை செய்யப்பட்டது.