சென்னை: விலைவாசி உயர்வை கட்டுப்படுத்துவது குறித்து அமைச்சர் சக்கரபாணி தலைமையில் ஆலோசனை நடைபெற்று வருகிறது. தலைமைச் செயலகத்தில் நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் தலைமைச் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர். உணவுப் பொருள் வழங்கல் ஆணையரின் நேரடி கட்டுப்பாட்டில் விலை கண்காணிப்பு நிதியம் இயங்கி வருகிறது. நுகர்வோரின் நலனை பாதுகாக்க ரூ.150 கோடி நிதியில் விலை கட்டுப்பாட்டு நிதியம் ஏற்கனவே ஏற்படுத்தப்பட்டுள்ளது.