அதனை அடிப்படையாக கொண்டு தான் விசாரணை நடத்தப்படுவது குறித்து திட்டமிட முடியும் என்று கடந்த மாதம் 7ம் தேதி உத்தரவிட்டு, விசாரணையை இன்றைக்கு ஒத்திவைத்திருந்தது. இந்த நிலையில் மேற்கண்ட வழக்கானது உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகள் சூர்யகாந்த், சி.டி.ரவிக்குமார் மற்றும் உஜ்ஜல் புயான் ஆகியோர் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஒன்றிய அரசு தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, ‘‘இந்த விவகாரத்தில் பல்வேறு சிக்கல்கள் உள்ளது. மேலும் ஒன்பது மனுக்களில் ஒன்று மட்டுமே எங்களிடத்தில் உள்ளது. எனவே வழக்கை வேறு தேதிக்கு ஒத்திவைக்க வேண்டும் என்று நீதிபதிகள் முன்னிலையில் கோரிக்கை வைத்தார். இதற்கு மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இதையடுத்து விசாரணை அக்டோபர் 3ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.