பெங்களூரு மல்லேஸ்வரத்தில் அப்படம் தொடர்பாக சித்தார்த் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது திடீரென்று அங்கு வந்த கன்னட அமைப்பினர் சிலர், ‘காவிரி விவகாரத்துக்கு இடையே இதுபோன்ற நிகழ்ச்சி அவசியமா?’ என்று கேள்வி எழுப்பினர். அவர்களின் மிரட்டலுக்கு சிறிதும் அசராமல், மேடையிலேயே நீண்ட நேரம் அமர்ந்திருந்தார் சித்தார்த். எனினும், கன்னட அமைப்பினர் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்ததால், சித்தார்த் எழுந்து நின்று செய்தியாளர்களுக்கு நன்றி தெரிவித்துவிட்டு புறப்பட்டார். இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.