கஜகஸ்தான் அதிபருடன் பிரதமர் மோடி போனில் பேச்சு

புதுடெல்லி: கஜகஸ்தானில் ஷாங்காய் ஒத்துழைப்பு உச்சி மாநாடு ஜூலை 3, 4 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற உள்ளன. இந்நிலையில் பிரதமர் மோடியும், கஜகஸ்தான் அதிபர் காசிம் ஜோ மார்ட் டோகாயேவும் நேற்று தொலைபேசி மூலம் உரையாடினர். அப்போது, “உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான பொதுதேர்தலை வெற்றிகரமாக நடத்தி 3வது முறை பிரதமர் பதவி ஏற்ற உங்களுக்கு அன்பான வாழ்த்துகள்” என கஜகஸ்தான் அதிபர் தெரிவித்தார். இதற்கு பிரதமர் மோடி, “அதிபர் டோகாயேவின் அன்பான வாழ்த்துகளுக்கு நன்றி. ஆஸ்தானாவில் நடைபெற உள்ள ஷாங்காய் ஒத்துழைப்பு உச்சி மாநாடு வெற்றி பெற இந்தியாவின் வாழ்த்துகள்” என்று கூறினார்.

Related posts

தனியார் மருத்துவமனை அறுவை சிகிச்சையில் பங்கேற்ற அரசு மருத்துவர் மீது ஏன் நடவடிக்கை இல்லை?: அரசு பதில்தர ஐகோர்ட் உத்தரவு

திமுக ஆட்சியில் எண்ணற்ற திட்டங்கள் விக்கிரவாண்டியில் திண்ணை பிரசாரம்: விவசாயிகள்-தொழிலாளர்கள் கட்சி அறிவிப்பு

வெளிநாடு செல்லும் அண்ணாமலை; தமிழக பாஜவை நிர்வகிக்க கமிட்டி அமைக்க திட்டம்: தேர்தலில் வேலை செய்யாதவர் பதவியை பறிக்க முடிவு