டெல்லி: சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதிகள் 5 பேரை நிரந்தர நீதிபதிகளாக நியமித்து குடியரசுத்தலைவர் உத்தரவிட்டுள்ளார். விக்டோரியா கவுரி, பி.பி.பாலாஜி, கே.கே.ராமகிருஷ்ணன், ஆர்.கலைமதி, கே.ஜி.திலகவதி நிரந்தர நீதிபதிகளாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். 5 பேரையும் நிரந்தர நீதிபதிகளாக நியமிக்க கொலிஜியம் அண்மையில் பரிந்துரைத்திருந்தது. கொலிஜியம் பரிந்துரையை ஏற்று 5 பேரையும் ஐகோர்ட் நிரந்தர நீதிபதிகளாக நியமித்து குடியரசுத்தலைவர் உத்தரவிட்டார். அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி சமிம் அகமதுவை சென்னை உயர்நீதிமன்றத்துக்கு இடமாற்றம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது. நீதிபதி சமிம் அகமது சென்னைக்கு மாற்றப்பட்டதன் மூலம் ஐகோர்ட் நீதிபதிகளின் எண்ணிக்கை 64 ஆக உயர்ந்தது.