டெல்லி: 12 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்களை நியமித்து குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உத்தரவிட்டுள்ளார். மராட்டிய மாநில ஆளுநராக சி.பி.ராதாகிருஷ்ணனை நியமித்து குடியரசுத் தலைவர் உத்தரவு. ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரியான கே.கைலாஷ்நாதன், புதுச்சேரி துணை நிலை ஆளுநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.