குடியரசு தலைவர் அளிக்கும் விருந்தில் பங்கேற்க முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை டெல்லி பயணம்

சென்னை: ஜி 20 மாநாட்டையொட்டி இந்திய குடியரசு தலைவர் திரவுபதி முர்மு அளிக்கும் விருந்தில் கலந்து கொள்வதற்காக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை டெல்லி செல்கிறார். டெல்லியில் நாளை ஜி 20 உச்சி மாநாடு நடைபெறுகிறது.

இதையொட்டி இந்திய குடியரசு தலைவர் திரவுபதி முர்மு அளிக்கும் விருந்தில் கலந்து கொள்வதற்காக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை (9ம் தேதி) காலை 10:05 மணிக்கு ஏர் இந்தியா பயணிகள் விமானத்தில், சென்னையில் இருந்து புறப்பட்டு, பகல் 12:45 மணிக்கு டெல்லி செல்கிறார். அங்கு அவர் இந்திய குடியரசு தலைவர் திரவுபதி முர்மு அளிக்கும் விருந்தில் கலந்து கொள்கிறார். பின்னர், மறுநாள் (10ம் தேதி) காலை 9:50 மணிக்கு ஏர் இந்தியா பயணிகள் விமானத்தில், டெல்லியில் இருந்து புறப்பட்டு, பகல் 12:40 மணிக்கு சென்னை வருகிறார்.

Related posts

பல்லாவரம், கூடுவாஞ்சேரி இடையே புறநகர் ரயில்களை நெரிசல் நேரங்களிலாவது இயக்க வேண்டும்: இந்திய கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்

கால்வாயை ஆக்கிரமித்து கட்டிய கட்டிடத்தை 3 மாதங்களில் அகற்ற ஐகோர்ட் ஆணை..!!

பாரீஸ் ஒலிம்பிக் வில்வித்தை மகளிர் ஒற்றையர் காலிறுதியில் தீபிகா குமாரி தோல்வி ..!!