பிரேமலதாவை கட்டிப்பிடித்து கதறி அழுத பெண்கள்

சென்னை: விஜயகாந்த் சினிமாவில் நடிக்கும்போது திருமணம் செய்தது முதல் நேற்று காலை உயிர் பிரிந்தது வரை கூடவே இருந்து அவருடைய கஷ்டத்தில் பங்கெடுத்தவர் பிரேமலதா. குழந்தைகள் பெரியவர்கள் பெண்கள் என வரிசையில் வந்து விஜயகாந்துக்கு அஞ்சலி செலுத்தினர். பெண்கள் பிரேமலதாவை கட்டி பிடித்துக் கொண்டு கதறி அழுதனர். சளைக்காமல் ஒவ்வொருவருக்கும் பிரேமலதா ஆறுதல் தெரிவித்தார். அதுபோல் தொடர்ந்து விஜய பிரபாகரனும் சண்முக பாண்டியனும், பிரேமலதாவும் கண்ணீர்விட்டவாறே இருந்தனர். பிரேமலதா அழுது அழுது வீங்கிய முகத்துடன் காணப்பட்டார். நள்ளிரவில் குழந்தைகள் எல்லாம் வந்த போது அங்கிளை பாரு என அழைத்து காட்டி, அவர்களின் கன்னத்தில் தட்டி நெகிழ்ந்தார். கொஞ்சம் கூட கூட்டம் குறையாமல் கட்சி அலுவலகத்திற்கு மக்கள் வந்து கொண்டே இருந்தனர். அவர்களுக்கு விஜய பிரபாகரனும் ஆறுதல் தெரிவித்தார். அவரை சின்ன கேப்டன் கலங்காதீர்கள் என தொண்டர்களும் ஆசுவாசப்படுத்தினர்.

Related posts

சென்னை மெரினாவில் நடைபெற்ற வான் சாகச நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, உடல்நலன் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 5-ஆக உயர்வு

வன்னியர் இடஒதுக்கீடு போராட்டத்தில் பலியான மணியின் பெயரை யாதவர் சமுதாயமென பதியவேண்டும்: முதல்வருக்கு, தமிழ்நாடு யாதவ மகாசபை கோரிக்கை

மீனவர்கள் திடீர் மறியல்: மாமல்லபுரம் அருகே பரபரப்பு