Sunday, October 6, 2024
Home » பிரேமலதாவை கட்டிப்பிடித்து கதறி அழுத பெண்கள்

பிரேமலதாவை கட்டிப்பிடித்து கதறி அழுத பெண்கள்

by Karthik Yash

சென்னை: விஜயகாந்த் சினிமாவில் நடிக்கும்போது திருமணம் செய்தது முதல் நேற்று காலை உயிர் பிரிந்தது வரை கூடவே இருந்து அவருடைய கஷ்டத்தில் பங்கெடுத்தவர் பிரேமலதா. குழந்தைகள் பெரியவர்கள் பெண்கள் என வரிசையில் வந்து விஜயகாந்துக்கு அஞ்சலி செலுத்தினர். பெண்கள் பிரேமலதாவை கட்டி பிடித்துக் கொண்டு கதறி அழுதனர். சளைக்காமல் ஒவ்வொருவருக்கும் பிரேமலதா ஆறுதல் தெரிவித்தார். அதுபோல் தொடர்ந்து விஜய பிரபாகரனும் சண்முக பாண்டியனும், பிரேமலதாவும் கண்ணீர்விட்டவாறே இருந்தனர். பிரேமலதா அழுது அழுது வீங்கிய முகத்துடன் காணப்பட்டார். நள்ளிரவில் குழந்தைகள் எல்லாம் வந்த போது அங்கிளை பாரு என அழைத்து காட்டி, அவர்களின் கன்னத்தில் தட்டி நெகிழ்ந்தார். கொஞ்சம் கூட கூட்டம் குறையாமல் கட்சி அலுவலகத்திற்கு மக்கள் வந்து கொண்டே இருந்தனர். அவர்களுக்கு விஜய பிரபாகரனும் ஆறுதல் தெரிவித்தார். அவரை சின்ன கேப்டன் கலங்காதீர்கள் என தொண்டர்களும் ஆசுவாசப்படுத்தினர்.

You may also like

Leave a Comment

nine − 2 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi