சென்னை : மகப்பேறு விடுப்பில் உள்ள பெண் காவலர்கள், விடுமுறை முடிந்த பிறகு தங்களது கணவர் / பெற்றோர் வசிக்கும் பகுதிகளில் பணியமர்த்தப்படுவர் என்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் அறிவிப்புக்கு ஆணை வெளியீடு செய்யப்பட்டது. சென்னையில் பணியாற்றும் 19 பேருக்கு, அவர்களின் விருப்ப பகுதிக்கு இடமாற்ற ஆணையை காவல் ஆணையர் அருண் இன்று வழங்கினார்.