உத்திரமேரூரில் கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு: எம்எல்ஏ பங்கேற்பு

உத்திரமேரூர்: உத்திரமேரூரில் 200 கர்ப்பிணிகளுக்கு, சீர்வரிசை பொருட்களுடன் வளைகாப்பு நிகழ்ச்சி நடந்தது. இதில், உத்திரமேரூர் எம்எல்ஏ சுந்தர் பங்கேற்று தொடங்கி வைத்தார். உத்திரமேரூரில் ஒருங்கிணைந்த குழந்தைகளின் வளர்ச்சி திட்ட பணிகள் சார்பில், சமுதாய வளைகாப்பு விழா தனியார் திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது. விழாவில், காஞ்சிபுரம் திமுக தெற்கு மாவட்ட செயலாளர் சுந்தர் எம்எல்ஏ தலைமை தாங்கி, விழாவினை துவக்கி வைத்தார். இதில், காஞ்சிபுரம் எம்பி செல்வம், உத்திரமேரூர் ஒன்றிய குழு தலைவர் ஹேமலதா ஞானசேகரன், துணை பெருந்தலைவர் வசந்திகுமார், ஒன்றிய செயலாளர் ஞானசேகரன், பேரூராட்சி மன்ற தலைவர் பொன்.சசிகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் பானுமதி அனைவரையும் வரவேற்றார்.

இந்நிகழ்ச்சியில், 200 கர்ப்பணிகளுக்கு ஒரே நேரத்தில் வளைகாப்பு விழா நடத்தப்பட்டது. இவ்விழாவில், 7 வகையான கலவை உணவுகள் கர்ப்பிணிகள் அனைவருக்கும் வழங்கப்பட்டன. மேலும், கர்ப்பிணிகள் கர்பகாலங்களில் உட்கொள்ள வேண்டிய ஊட்டச்சத்து உணவுகள் குறித்து ஆலோசனை வழங்கப்பட்டது. இதில் கலந்துகொண்ட 200 கர்ப்பிணிகளுக்கும் சீர்வரிசையாக சேலை, வளையல், பூ, மஞ்சள், குங்குமம், பழங்கள் அடங்கிய சீர்வரிசை தொகுப்பினை சுந்தர் எம்எல்ஏ வழங்கி வாழ்த்தினார். இந்நிகழ்ச்சியில், நகர செயலாளர் பாரிவள்ளல், பேரூராட்சி துணை தலைவர் இளமதி கோவிந்தராஜன், கவிதா சசிகுமார், அங்கன்வாடி பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Related posts

அக்டோபர் 2ம் தேதி திருப்பதி திருக்குடை ஊர்வலத்தை ஒட்டி காலை 10 மணி முதல் முக்கிய இடங்களில் போக்குவரத்து மாற்றம்!

எடப்பாடி பழனிசாமிக்கு தமிழ்நாடு அரசு கண்டனம்

கொடைக்கானலில் தொடரும் இ-பாஸ் நடைமுறை!