அப்போது அதிகாரிகளை பார்த்ததும் கர்ப்பிணிகள் தப்பியோடிவிட்டனர். இதையடுத்து முருகேசன் வீட்டில் சோதனை செய்தனர். அதில் பரிசோதனை கருவி, கை உறை, கருகலைப்பிற்கு பயன்படுத்தக்கூடிய மருந்து, மாத்திரைகள், 2 கார், பைக், மருத்துவ உபகரணங்களை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து முருகேசனுக்கு சொந்தமான ₹2 கோடி மதிப்பிலான வீட்டுக்கு (கருகலைப்பு மையம்) சீல் வைத்தனர்.
இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் குழு கொடுத்த புகாரின்பேரில் சின்னசேலம் போலீசார் வழக்கு பதிவு செய்து முருகேசனை கைது செய்தனர். முருகேசன் மீது ஏற்கனவே கருகலைப்பு செய்த விவகாரத்தில் சின்னசேலம் உள்ளிட்ட காவல் நிலையங்களில் மூன்று வழக்குகள் நிலுவையில் உள்ளன. தற்போது 4வது வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.