புதுக்கோட்டை: புதுக்கோட்டை தனியார் மருத்துவமனையில் கர்ப்பிணி உயிரிழந்த விவகாரத்தில் சுகாதாரத்துறை ஆய்வு மேற்கொண்டு வருகிறது. சுகாதாரத்துறை இணை இயக்குநர் தேன்மொழி, குடும்ப நலத் துணை இயக்குநர் கோமதி உள்ளிட்டோர் ஆய்வு மேற்கொண்டனர். பொன்னமராவதியில் கருக்கலைப்பின்போது கர்ப்பிணி கலைமணி உயிரிழந்த நிலையில் ஆய்வு நடத்தப்பட்டது.