சூளேஸ்வரன்பட்டியில் வரும் முன் காப்போம் திட்ட சிறப்பு மருத்துவ முகாம்

பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே சூளேஸ்வரன்பட்டியில் உள்ள பள்ளி வளாகத்தில் நேற்று, சூளேஸ்வரன்பட்டி பேரூராட்சி மற்றும் கஞ்சம்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில், கலைஞரின் வரும் முன் காப்போம் திட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது. இதற்கு, பேரூராட்சி தலைவர் வனிதா தலைமை தாங்கினார். பேரூராட்சி செயல் அலுவலர் பூபதி வரவேற்று பேசினார்.இதில், பேரூராட்சி முன்னாள் தலைவர் சந்திரமோகன் கலந்து கொண்டு, முகாமை துவக்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில், பேரூராட்சி துணை தலைவர் ஜெயமணி சேது, பேரூராட்சி திமுக செயலாளர் ஆறுச்சாமி மற்றும் சேது, மைதீன்பாய், செல்வகுமார், ஜனகராஜ், காமாட்சி, இளங்கோவன், சண்முகசுந்தரம், ஜெய்னுதீன், காஜாசெல்வராஜ், ஜெயக்குமார், ராஜா, காமல்பாய் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இம்முகாமில் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.

 

Related posts

தமிழ்நாட்டின் வரலாற்றில் இன்று மகிழ்ச்சி மிக்க நாள்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி!

பெரியகுளம் பகுதியில் புகையிலை பொருட்கள் விற்ற கடைகளுக்கு சீல்

பூவிருந்தவல்லி அருகே மின்கம்பி பதிப்பதற்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்து