இவ்வாறு பேசிய மனைவியை அடிப்பது, திட்டுவது என கொடுமைப்படுத்தியுள்ளார். இது பிடிக்காததால் மனைவியை பெற்றோர் வீட்டுக்கு அர்ஷாத் அனுப்பி விட்டார். இரு தரப்பையும் சேர்ந்த பெரியவர்கள் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர் மர்யம் கணவர் வீட்டுக்கு வந்துள்ளார்.சமீபத்தில் பிரதமர் மோடியையும், யோகி ஆதித்யநாத்தையும் மர்யம் மீண்டும் புகழ்ந்துள்ளார். இதையடுத்து அர்ஷாத் தனது மனைவியிடம் 3 முறை தலாக் சொல்லியுள்ளார். இதுபற்றி போலீசில் மர்யம் புகார் அளித்தார். அர்ஷாத் உட்பட 8 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதனிடையே, மர்யம் பேசும் வீடியோ கிளிப்புகள் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.