ஒரு வருட தொழிற்பழகுநர் பயிற்சிக்கு வரும் 31ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்: டான்ஜெட்கோ அறிவிப்பு

சென்னை: ஒரு வருட தொழிற்பழகுநர் பயிற்சிக்காக மாணவர்களிடம் இருந்து வரும் 31ம் தேதி வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தமிழக மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்திருப்பதாவது:

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் (டான்ஜெட்கோ) மற்றும் மத்திய தொழிற்பழகுநர் பயிற்சி வாரியத்துடன் (தென் மண்டலம் – சென்னை) இணைந்து பட்டய பொறியியலில் இன்ஜினியரிங் மற்றும் எலக்ட்ரிக்கல் – எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங், எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன் இன்ஜினியரிங், எலக்ட்ரானிக்ஸ் அண்ட் இன்ஸ்ட்ரூமென்டேஷன் இன்ஜினியரிங்,

கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் கம்ப்யூட்டர் சயின்ஸ் இன்ஜினியரிங், தகவல் தொழில்நுட்பம், சிவில் இன்ஜினியரிங் மற்றும் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பிரிவில் பட்டய படிப்பில் (டிப்ளமோ) கடந்த 2020, 2021, 2022 மற்றும் 2023ம் ஆண்டுகளில் தேர்ச்சி பெற்று தமிழ்நாட்டில் வசிக்கும் மாணவர்களிடம் இருந்து, ஒரு வருடம் தொழிற்பழகுநர் பயிற்சிக்காக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அந்தவகையில், தகுதி உள்ள மாணவர்கள் ஆன்லைன் மூலம் வரும் 31ம் தேதி வரை www.boat-srp.com (News மற்றும் Events) என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

பண்ருட்டி அருகே 2000 லிட்டர் மெத்தனால் பதுக்கல்: பெட்ரோல் பங்க்-கிற்கு சீல்; சிபிசிஐடி அதிரடி

டிஜிட்டல் பண பரிவர்த்தனை ஊக்குவித்தால் பரிசு

சென்னையில் மாநகரப் பேருந்து கண்ணாடி உடைப்பு