பொழிச்சலூர், கவுல்பஜார் பகுதியில் மழைநீர் கால்வாய், சாலைகள் பூங்கா அமைக்க ரூ.11.37 கோடி: அமைச்சர் வழங்கினார்


சென்னை: சென்னை பெருநகர் வளர்ச்சி குழும அலுவலக கூட்டரங்கில் சென்னை பெருநகர் வளர்ச்சி குழும தலைவர்ரும், அறநிலையத்துறை அமைச்சருமான பி.கே.சேகர்பாபு, ஆலந்தூர் மற்றும் பல்லாவரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட புனித தோமையா ஒன்றியம், பொழிச்சலூர் மற்றும் கவுல் பஜார் ஆகிய பகுதிகளில் மழைநீர் கால்வாய் அமைத்தல், சாலைகள் மற்றும் பூங்காக்களை மேம்படுத்துவதற்காக சென்னை பெருநகர் வளர்ச்சி குழும திட்ட நிதியிலிருந்து ரூ.11.37 கோடி நிதியை செங்கல்பட்டு மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூடுதல் ஆட்சியர் அனாமிகா ரமேஷிடம் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் இ.கருணாநிதி, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை செயலாளர் காகர்லா உஷா, சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழும உறுப்பினர் செயலர் அன்சுல் மிஸ்ரா, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை இணைச் செயலாளர் ஷ்ரவன் குமார் ஜடாவத் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Related posts

சீசனுக்கு முன்னதாகவே நீலகிரியில் நீர் பனி பொழிவு: தேயிலை விவசாயிகள் அச்சம்

தெருநாய்கள் கடித்ததால் பலியானது; வளர்ப்பு நாய் உடலுக்கு கண்ணீர் மல்க இறுதி மரியாதை: மோட்ச தீபமேற்றி வாகனத்தில் ஊர்வலம்

திருப்பதி கோயில் பிரசாத லட்டில் மாட்டிறைச்சி கொழுப்பு கலப்பு: வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்