மின்கம்பி அறுந்து விழுந்து பசுமாடு பலி

 

ஊத்தங்கரை, நவ.4: ஊத்தங்கரை அருகே உள்ள ஊனாம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் வேடியப்பன் (55), விவசாயியான இவர் பசு மாடுகள் வளர்த்து வந்தார். நேற்று முன்தினம் காலை, திடீரென எதிர்பாராத விதமாக மேலே சென்று கொண்டிருந்த மின்கம்பி அறுந்து, பசுமாட்டின் மீது விழுந்தது. இதில் மின்சாரம் தாக்கியதில் பசுமாடு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. பசுவை காப்பாற்ற முயன்ற வேடியப்பன் மீதும், மின்கம்பி உரசியது. இதில் அவர் லேசான காயத்துடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து ஊத்தங்கரை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

நெற்பயிர், மா, வாழை மரங்களை துவம்சம் செய்த ஒற்றை யானை வனப்பகுதிக்குள் விரட்டியடிப்பு

நுகர்பொருள் வாணிப கிடங்கில் இருந்து செல்லும் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் உத்தரவு

இபிஎப்ஓ பி.ஏ., இஎஸ்ஐசி நர்சிங் அலுவலர் பணியிடங்களுக்கான யுபிஎஸ்சி எழுத்து தேர்வு