ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்; ரிக்டர் அளவுகோலில் 5.6 ஆக பதிவு!

ஜப்பான்: ஜப்பானில் அதிகாலையில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது, ரிக்டர் அளவுகோலில் 5.6 ஆக பதிவாகியுள்ளது. சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து இசு, ஒகசவாரா தீவுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஜப்பானின் தொலைதூர தீவான இசு தீவுகளுக்கு அருகே நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவில் 5.6 ரிக்டர் ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் மற்றும் உள்ளூர் வானிலை அதிகாரிகள் சுனாமி எச்சரிக்கையை வெளியிட்டுள்ளனர். இதனால் தீவில் வசித்து வரும் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

நான்கு பெரிய டெக்டோனிக் தட்டுகளின் மேல் ஜப்பான் நிலப்பரப்பு அமைந்துள்ளதால், ஒவ்வொரு ஆண்டும் சுமார் 1,500 நிலநடுக்கங்களை அந்நாடு எதிர்கொள்கிறது. அவற்றில் பெரும்பாலானவை சிறியவை. மேம்பட்ட கட்டிட நுட்பங்கள் மற்றும் நன்கு நடைமுறைப்படுத்தப்பட்ட அவசரகால நடைமுறைகள் காரணமாக பெரிய நடுக்கம் ஏற்பட்டாலும் பாதிப்பு பொதுவாகக் கட்டுப்படுத்தப்படுகிறது. இதை தொடர்ந்து, தாஜிகிஸ்தான் நாட்டில் இன்று காலை 6.24 மணிக்கு மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. பூமிக்கு அடியில் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.1 ஆக பதிவாகியுள்ளது.

Related posts

கேரள மாநிலம் கோட்டயத்தில் கார் ஆற்றில் கவிழ்ந்து இருவர் உயிரிழப்பு

மலேசிய மோசடி கும்பலைச் சேர்ந்த 2 பேர் கைது..!!

லெபனான் மீது இஸ்ரேல் குண்டு மழை.. பலி எண்ணிக்கை 492 ஆக அதிகரிப்பு : ஹிஸ்புல்லா 200 ராக்கெட்டுகளை ஏவி பதிலடி