இதனையடுத்து லஞ்சம் கொடுக்க விரும்பாத சுரேஷ் சென்னை லஞ்ச ஒழிப்பு போலீசில் கடந்த 2014ல் கொடுத்த புகாரின் பேரில் சிவக்குமார் ரூ.1000 லஞ்சம் வாங்கும் போது கையும், களவுமாக கைது செய்யப்பட்டார். இது சம்பந்தமான வழக்கு திருவள்ளூர் மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் கடந்த 2015 முதல் நடைபெற்று வந்தது. இந்த வழக்கு விசாரணை முடிந்த நிலையில் நீதிபதி கே.மோகன் நேற்று தீர்ப்பு வழங்கினார். அதில் அண்ணனூரில் வீட்டிற்கு மும்முனை மின்சார இணைப்பு வழங்க ரூ.1000 லஞ்சம் வாங்கிய ஆவடி தெற்கு வணிக ஆய்வாளர் சிவகுமாருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.20 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி அதிரடி தீர்ப்பு வழங்கினார்.