கோடைகாலம் தொடங்கியது முதல் மின்சார பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக மின் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர். இந்நிலையில் ஏப்.2ம் தேதி 430.13 மில்லியன் யூனிட் மின் நுகர்வு இருந்தது. தற்போது அதையும் கடந்து நேற்று முன்தினம் (ஏப்.3) 435.85 மி.யூ. மின் நுகர்வு பதிவாகி மீண்டும் புதிய உச்சத்தை எட்டியுள்ளது. அதிகபட்ச மின் நுகர்வு இருந்தாலும் மின் தேவை பூர்த்தி செய்யப்பட்டதாக மின் வாரியம் தெரிவித்துள்ளது.
மின்வாரியம் வெளியிட்ட டிவிட்டர் பதிவில், நம் மாநிலத்தின் உச்ச பட்ச மின் நுகர்வு 435.85 மில்லியன் யூனிட் ஆக ஏப்ரல் 3ம் தேதி பதிவானது (முந்தைய உச்சபட்ச நுகர்வு ஏப்.2ம் தேதி, 430.13 மில்லியன் யூனிட்). இதை மின்சார வாரியம் திறம்பட பூர்த்தி செய்து வருகிறது என குறிப்பிட்டுள்ளது.