ரூ.78.67 கோடி மதிப்பீட்டில் குறுவை சாகுபடி சிறப்பு தொகுப்பு திட்டம்: அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் அறிவிப்பு

சென்னை: ரூ.78.67 கோடி மதிப்பீட்டில் குறுவை சாகுபடி சிறப்பு தொகுப்பு திட்டத்தை செயல்படுத்தப்பட உள்ளதாக வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: டெல்டா விவசாயிகளை காக்கும் விதமாக ரூ78.67 கோடி மதிப்பீட்டில் குறுவை சாகுபடி தொகுப்பை உழவர் நலன் கருதி வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதன் விவரம்:

* 1,00,000 லட்சம் ஏக்கர் பரப்பளவிற்கு, 2,000 மெட்ரிக் டன் நெல் விதைகள் மானிய விலையில் ரூ3.85 கோடி மதிப்பில் வேளாண் விரிவாக்க மையங்கள் மூலம் வழங்கப்படும்.

* நெற்பயிர் இயந்திர நடவு பின்னேற்பு மானியமாக ஏக்கர் ஒன்றிற்கு ரூ4 ஆயிரம் வீதம், 1 லட்சம் ஏக்கர் பரப்பளவிற்கு ரூ40 கோடி நிதி வழங்கப்படும்.

* நுண்ணூட்ட சத்து குறைபாடுள்ள 7,500 ஏக்கர் பரப்பளவில், நெல் நுண்ணூட்ட கலவை 50 சதவீத மானியத்தில் விநியோகிக்க ரூ15 லட்சம் வழங்கப்படும். துத்தநாக சல்பேட் உரத்தை பயன்படுத்துவதற்கு, ஏக்கருக்கு ரூ250 வீதம், 25 ஆயிரம் ஏக்கர் பரப்பளவுக்கு, ரூ62 லட்சத்து 50 ஆயிரமும், 25 ஆயிரம் ஏக்கரில் ஜிப்சம் பயன்படுத்துவதற்காக ஏக்கருக்கு மானியமாக ரூ250 ரூபாய் வீதம் ரூ62 லட்சத்து 50 ஆயிரமும் வழங்கப்படும்.

* பயறு வகைப் பயிர்களை 10,000 ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்வதற்கு, 50 சதவீத மானியத்தில் தரமான விதைகள், சூடோமோனாஸ், திரவ உயிர் உரங்கள் மற்றும் இலை வழி உரம் தெளிக்கவும், ரூ1 கோடியே 20 லட்சம் நிதியும், பயறுவகை பயிர்களில் மகசூல் திறனை அதிகரிக்க 50 சதவீத மானியத்தில் 10,000 ஏக்கருக்கு நுண்ணூட்டச்சத்து வழங்கிட ரூ20 லட்சம் நிதியும் வழங்கப்படும்.

* வேளாண்மை பொறியியல் துறை மூலம் விசை உழுவை, களையெடுக்கும் கருவி, விதை மற்றும் உரமிடும் கருவி, இயந்திர கலப்பை, சுழற் கலப்பை, சாகுபடி கலப்பை, பலதானிய பிரித்தெடுக்கும் கருவி, ஆளில்லா வானூர்திக் கருவி மற்றும் சூரிய சக்தியால் இயங்கும் பம்ப்செட் போன்ற 442 கருவிகள் வழங்க மானியமாக ரூ7 கோடியே 52 லட்சம் நிதி வழங்கப்படும்.

* மகாத்மா காந்தி தேசிய வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் வேலைவாய்ப்பு வழங்க ரூ24 கோடியே 50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

Related posts

சென்னை கதீட்ரல் சாலையில் கலைஞர் நூற்றாண்டு பூங்காவை நாளை திறந்து வைக்கிறார் முதலமைச்சர்

சென்னை மெரினா கடற்கரையில் வான்சாகசக் நிகழ்ச்சி

மும்பை செம்பூரில் வீடு ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உட்பட 7 பேர் உயிரிழப்பு