இதனால் ஆத்திரம் அடைந்த வசந்த், டிபன் கடையில் இருந்த இட்லி பாத்திரத்தை எட்டி உதைத்தபோது அங்கு நின்றுகொண்டிருந்த அண்ணாதுரையின் 3 வயது பேரன் சர்வின் மீது இட்லி பாத்திரத்தில் இருந்த வெந்நீர் முழுவதும் பட்டு குழந்தையின் உடல் வெந்தது. உடல் கருகி வலியால் துடித்த குழந்தையை உடனடியாக அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளித்துவிட்டு மேல் சிகிச்சைக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். 20 சதவீத தீக்காயங்களுடன் குழந்தை சிகிச்சை பெற்று வருகிறது. இதுதொடர்பாக வியாசர்பாடி போலீசார் வழக்குபதிவு செய்து வசந்தை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.