போதை ஆசாமி எட்டி உதைத்ததில் பானையில் இருந்து வெந்நீர்பட்டு 3 வயது குழந்தை உடல் வெந்தது

பெரம்பூர்: குடிபோதை ஆசாமி எட்டி உதைத்ததில் இட்லி பானையில் இருந்து வெந்நீர் கொட்டி 3 வயது குழந்தையின் உடல் வெந்தது. சென்னை வியாசர்பாடி எருக்கஞ்சேரி நெடுஞ்சாலை பகுதியை சேர்ந்தவர் அண்ணாதுரை (55). இவர் அங்குள்ள நடைபாதையில் டிபன் கடை நடத்துகிறார். நேற்றிரவு 8 மணி அளவில், எருக்கஞ்சேரி ஹை ரோடு பகுதியை சேர்ந்த வசந்த் (19) என்பவர் குடிபோதையில் வந்து தோசை கேட்டுள்ளார். இதையடுத்து தோசை தயார் செய்து கொடுத்தபோது மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவர் சென்றுள்ளார். அப்போது அவரிடம் வசந்த் தகராறு செய்துள்ளார். இதனால் அண்ணாதுரை, அவரது மனைவி சாந்தா ஆகியோர் வசந்தை தடுத்துள்ளனர்.

இதனால் ஆத்திரம் அடைந்த வசந்த், டிபன் கடையில் இருந்த இட்லி பாத்திரத்தை எட்டி உதைத்தபோது அங்கு நின்றுகொண்டிருந்த அண்ணாதுரையின் 3 வயது பேரன் சர்வின் மீது இட்லி பாத்திரத்தில் இருந்த வெந்நீர் முழுவதும் பட்டு குழந்தையின் உடல் வெந்தது. உடல் கருகி வலியால் துடித்த குழந்தையை உடனடியாக அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளித்துவிட்டு மேல் சிகிச்சைக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். 20 சதவீத தீக்காயங்களுடன் குழந்தை சிகிச்சை பெற்று வருகிறது. இதுதொடர்பாக வியாசர்பாடி போலீசார் வழக்குபதிவு செய்து வசந்தை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related posts

முடிவுக்கு வருகிறது போராட்டம் நாளை பணிக்கு திரும்பும் கொல்கத்தா டாக்டர்கள்

இந்தியாவிலிருந்து வெடிமருந்துகள் உக்ரைன் செல்கிறதா? ஒன்றிய அரசு மறுப்பு 

நந்தனம் ஓட்டலில் உள்ள ஸ்பாவில் பாலியல் தொழில் நடத்திய பெண் கைது: 4 பட்டதாரி இளம்பெண்கள் மீட்பு