ராகுல்காந்தி கோரிக்கையின்படி மக்கள் தொகை கணக்கெடுப்போடு, சாதிவாரி கணக்கெடுப்பையும் சேர்த்து நடத்த வேண்டும் என்பதற்கு நாட்டில் மிகப்பெரிய ஆதரவு பெருகி வருவதால் அதை தவிர்ப்பதற்காகவே மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்தாமல் மோடி அரசு தடுத்து வருகிறது. இதனை வன்மையாக கண்டிக்கிறேன். எனவே, ராகுல்காந்தி கோரிக்கையின்படி உடனடியாக மக்கள் தொகை மற்றும் சாதிவாரி கணக்கெடுப்பையும் இணைத்து நடத்த வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.