உடல் பருமனுக்கு எதிரான மருந்துகளை வழங்கும் வகையிலான 2 ஆண்டு சோதனை திட்டத்தை அந்நாட்டின் பிரதமர் ரிஷி சுனக் நேற்று தொடங்கி வைத்தார். 40மில்லியன் பவுண்ட் மதிப்பீட்டில் இந்த திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. தொடர்ந்து பேசிய பிரதமர் ரிஷி சுனக், ‘‘உடல் பருமன் தேசிய சுகாதார சேவை மீது மிகுந்த அழுத்தத்தை உருவாக்குகிறது. உடல் எடையை குறைக்க மக்களுக்கு உதவும் வகையில் சமீபத்திய மருந்துகளை பயன்படுத்துவதன் மூலமாக, உடல் பருமனால் ஏற்படும் உயர்ரத்த அழுத்தம், நீரிழிவு மற்றும் புற்றுநோய் போன்ற ஆபத்தான நோய்களை தவிர்த்து மக்கள் ஆரோக்கியமாக வாழ்வதற்கு உதவ முடியும்” என்றார்.