மலபார் கோல்டு மற்றும் டைமண்ட்ஸின் பிராண்ட் அம்பாசிடரானார் பிரபல நடிகை ஆலியா பட்

சென்னை: 10 நாடுகளில் 312 ஷோரும்களுடன் உலகளவில் 6வது பெரிய நகை சில்லரை விற்பனை நிறுவனமான மலபார் கோல்டு மற்றும் டைமண்ட்ஸ், தனது புதிய விளம்பர தூதராக இந்திய நடிகை ஆலியா பட்டுடன் கையொப்பமிட்டுள்ளது. இதுகுறித்து மலபார் குழும தலைவர் எம்.பி.அகமது கூறுகையில், ‘‘இந்த ஒப்பந்தம், மலபார் கோல்டு மற்றும் டைமண்ட்ஸ் பிராண்டிற்கு புதிய உலகளாவிய கண்ணோட்டத்தை வழங்குவதுடன் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, கனடா, தென் ஆப்பிரிக்கா, எகிப்து, பங்களாதேஷ், துருக்கி மற்றும் நியுசிலாந்து போன்ற நாடுகளின் புதிய சந்தைகளிலும் விற்பனையை அமைக்கும் எண்ணத்தை விதைக்கிறது.

மலபார் கோல்டு மற்றும் டைமண்ட்ஸ் பிராண்டை ஆலியா பட் மூலம் புதிய உயரத்திற்கு கொண்டு செல்ல நாங்கள் முயல்கிறோம். இந்திய கலை கலாச்சாரம், பாரம்பரியம் மற்றும் பண்பாடு ஆகியவற்றின் வெளிப்பாடாக இருக்கும் நகைகளை வடிவமைத்து, விளம்பரப்படுத்தி, விற்பனை செய்வதன் மூலம் உலகின் மிகப்பெரிய நகை விற்பனையாளராக முடிசூட வேண்டும் என்பதே எங்கள் குறிக்கோள். அதனை ஒரு நடிகையாக மற்றும் தனிநபராக ஆலியா பட் சிறப்பாக கொண்டு செல்வார் என்று நாங்கள் நம்புகிறோம். எங்களது நிறுவனம் 30வது ஆண்டு நிறைவை கொண்டாடும் வேளையில், எங்கள் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த நகைகள் ஷாப்பிங் அனுபவத்தை வழங்குவதற்கான நோக்கை நாங்கள் மீண்டும் உறுதிப்படுத்துகிறோம்,’’ என்றார்.

Related posts

விக்கிரவாண்டியில் நாளை வாக்கு எண்ணிக்கை: காலை 11 மணிக்கு முடிவு தெரியும்

விழிஞ்ஞம் துறைமுகத்தால் உலக வரைபடத்தில் இந்தியா இடம் பிடித்துள்ளது: கேரள முதல்வர் பெருமிதம்

மடிப்பாக்கம் பிரதான சாலை மற்றும் மேடவாக்கம் பிரதான சாலை சந்திப்பில் போக்குவரத்து மாற்றம்!