சென்னை: சென்னை பூவிருந்தவல்லியில் தனியார் கல்லூரியில் மாணவர்கள் 100-க்கும் மேற்பட்டோர் போராட்டம் நடத்தி வருகின்றனர். கல்லூரியில் எம்பிஏ படிக்கும் மாணவர்களிடம் பெற்ற கல்வி கட்டணத்தை, கட்டவில்லை என கூறியதால் மாணவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மாணவர்களிடம் தலா ரூ.3 லட்சம் வரை பெற்ற தொகையை கல்லூரி டீன், அட்மிஷன் பொறுப்பாளர் கையாடல் என புகார் அளித்துள்ளனர். டீன், அட்மிஷன் பொறுப்பாளர் வாங்கிய பணத்துக்கு தாங்கள் பொறுப்பல்ல என நிர்வாகம் கூறியதால் போராட்டம் நடத்தி வருகின்றனர்.