அதன்படி பூந்தமல்லி நகராட்சிக்கு உட்பட்ட 10வது வார்டு ருக்மணி நகர், சீரடி சாய் நகர், 12வது வார்டு மகாலட்சுமி நகர், கீர்த்தி கார்டன், 13வது வார்டு சீனிவாசா நகர் 14வது வார்டு. குயின் விக்டோரியா சாலை ஆகிய பகுதிகளில் மொத்தம் 6 புதிய உயர் திறன் கொண்ட மின்மாற்றிகள் ரூ.40 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டன. இந்த புதிய மின்மாற்றிகளை மக்கள் பயன்பாட்டிற்கு இயக்கி வைக்கும் நிகழ்ச்சி முன்னாள் நகர் மன்ற தலைவர் பூந்தமல்லி நகர திமுக செயலாளர் ஜி.ஆர்.திருமலை தலைமையில் நேற்று நடந்தது. இதில் நகர மன்ற தலைவர் காஞ்சனா சுதாகர், துணைத்தலைவர் தர், மாவட்ட பிரதிநிதி லயன் சுதாகர், நகர்மன்ற உறுப்பினர்கள் கன்னி மரியாள் வின்பிரட், அசோக்குமார், கீதா மேகநாதன், ராஜ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட ஆ.கிருஷ்ணசாமி எம்எல்ஏ புதிய மின்மாற்றிகளை மக்கள் பயன்பாட்டிற்காக இயக்கி வைத்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் நகர திமுக நிர்வாகிகள் எச்.தாஜூதீன், துரை பாஸ்கர், அப்பர் ஸ்டாலின், டில்லிராணி மலர்மன்னன், அசோக்குமார், புண்ணியகோட்டி, அன்பழகன், சௌந்தர்ராஜன், வட்டச் செயலாளர்கள் ராஜ்குமார், சரவணன், நந்தகுமார், வின்பிரட், வார்டு பிரதிநிதி எம். இளையராஜா உள்பட ஏராளமான திமுகவினர், மின்வாரிய அதிகாரிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.