இதுகுறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, சமீபத்தில் கோயில் நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி கையகப்படுத்த நீதிமன்றம் உத்தரவிட்டது. இதுகுறித்து கோயில் நில ஆக்கிரமிப்பாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கியும், அவர்கள் காலி செய்யவில்லை. இதனால், கோயில் நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற இந்து சமய அறநிலையத்துறை முடிவு செய்தது.
இந்நிலையில், இன்று காலை திருக்கச்சி நம்பிகள் மற்றும் வரதராஜப் பெருமாள் கோயில் உதவி ஆணையர் சித்ராதேவி தலைமையில் செயல் அலுவலர் மாதவன் மேற்பார்வையில், ஜெசிபி இயந்திரங்களின் உதவியுடன் கோயில் நிலத்தில் இருந்த அனைத்து ஆக்கிரமிப்புகளை அகற்றி, அக்கட்டிடங்களுக்கு சீல் வைக்கப்பட்டது. இந்நடவடிக்கையின் மூலம் ஆக்கிரமிப்பில் இருந்த ₹25 கோடி மதிப்பிலான 90 சென்ட் கோயில் நிலம் மீட்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து, ‘இந்நிலம் கோயிலுக்கு சொந்தமானது. அத்துமீறி ஆக்கிரமிப்பவர்கள்மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்’ என அறநிலையத்துறை சார்பில் எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டது. இந்த ஆக்கிரமிப்பு அகற்றும் பணிகளில் பூந்தமல்லி போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டனர்.