பூண்டி சத்யமூர்த்தி அணையில் புதிய கதவணை பொருத்தும் பணி தொடக்கம்

திருவள்ளூர்: சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய அணையான திருவள்ளூர் மாவட்டம் பூண்டி சத்யமூர்த்தி அணையில், பழுதடைந்த 2 கதவணைகள் மாற்றப்பட்டு புதிய கதவணைகள் பொருத்தும் பணி தொடங்கியது. அணை கட்டப்பட்டு 86 ஆண்டுகள் ஆன நிலையில், 8 மற்றும் 9ம் எண் மணல் வாரி கதவணைகளில் நீர்க்கசிவு ஏற்பட்டது.

தொடர்ந்து தண்ணீர் இருந்ததால் உடனே சரி செய்ய முடியாத நிலை இருந்தது. தற்போது நீர் இருப்பு குறைந்ததால் , 2 கதவணைகளை மாற்றவும் மேலும் 14 கதவணைகளை சீரமைக்கவும் அரசு ரூ.9.84 கோடி நிதி ஒதுக்க, அதற்கான பணிகள் தொடங்கியது. கதவணைகள் பழுதுபார்க்கும் பனி கடந்த ஜூன் மாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது. வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பாக செப்டம்பர் மாதம் இறுதிக்குள் பணிகளை முடிக்க திட்டமீட்டுள்ளனர்.

Related posts

சிதம்பரம் நடராஜர் கோவிலுக்குச் சொந்தமான 2,000 ஏக்கர் நிலத்தை தீட்சிதர்கள் விற்றுவிட்டதாக அறநிலையத் துறை குற்றச்சாட்டு!

பாறைக்கால் மடத்தில் பழைய பாலம் இடிப்பு: மழைவெள்ளம் குடியிருப்பு பகுதிகளில் புகாது

ஒன்றிய அரசு நிதி வழங்காததால் ‘நைந்து’ போன நெசவுப் பூங்கா திட்டம்